அரசு பள்ளி மாணவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுற்றுப்பயணம் செல்ல தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 21, 2018

அரசு பள்ளி மாணவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுற்றுப்பயணம் செல்ல தேர்வு

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறுபதி அரசு துவக்கப்பள்ளி மாணவன், திருவனந்தபுரம் தும்பா இந்தியவிண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சுற்றுப்பயணம் செல்ல தேர்வாகியுள்ளார். நாளை, (21ம் தேதி)சுற்றுப்பயணம் செல்கிறார் ஒவ்வொரு ஆண்டும் அக்., 4 முதல், 10ம் தேதி வரை சர்வதேச அளவில் விண்வெளி வாரம் அனுசரிக்கப்படுகிறது
அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு, 'ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசன் - ஓ.எஸ்.எப்.,' என்ற தனியார் அமைப்பு சார்பில், 'விண்வெளி திறனறிதல்' தலைப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, அக்., 9ம் தேதி 'ஆன்லைன்' வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த புரிதலை சோதிக்கும் விதமாக இப்போட்டியில், 'சூரிய குடும்பம்என்றால் என்ன, நிலாவில் எப்படி வீடு கட்டுவீர்கள், பூமியின் வடிவம் என்ன' என்பன உள்ளிட்ட ஐந்து கேள்விகள் இடம்பெற்றிருந்தது போட்டியில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறுபதி அரசு துவக்கப்பள்ளியில் இருந்து, பத்து மாணவர்கள் பங்கேற்றனர்.kaninikkalvi. இதில், ஐந்தாம் வகுப்பு பயிலும், ஆழியாறு கிராமத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி ராஜேந்திரன் மகன் திவாகர், 11, சிறப்பாக பதிலளித்தார்
இதையடுத்து, ஓ.எஸ்.எப்., அமைப்பு சார்பில் திருவனந்தபுரம் தும்பா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு நாளை, (21ம் தேதி) சுற்றுப்பயணம் செல்ல தேர்வாகியுள்ளார் கிராமப்புற பள்ளியில் படித்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட் தேர்வாகிய மாணவனை, பள்ளி தலைமை ஆசிரியை சாரதா, ஆசிரியை மகேஸ்பிரியா மற்றும் பெற்றோர் பாராட்டினர் பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், ''போட்டியில் கோவை மாவட்டத்தில், ஆறு அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அதில், எங்கள் பள்ளி மாணவனும் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது மாணவனுக்கு, திருவனந்தபுரம் தும்பா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், ராக்கெட் ஏவுவதை அருகிலிருந்து காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது
சுற்றுப்பயணத்தின் போது விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தின் செயல்பாடு, விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் ராக்கெட்உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை பார்வையிட செல்கிறார்,'' என்றார் மாணவன் திவாகர் கூறுகையில், ''விண்வெளி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். கணினிக்கல்வி. புத்தகத்தில் உள்ளதையும், ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை வைத்தும் விண்வெளி, கோள்கள் குறித்து கற்றுக்கொண்டேன். விண்வெளிக்கு செல்ல வேண்டும், நிலாவை தொட வேண்டுமென்பது வாழ்நாள் ஆசை,'' என்றார். மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்னதை போன்று, கனவு காணும் மாணவனுக்கு வாழ்த்துக்கள்!
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews