மத்திய அரசின்'செல்வமகள்' சேமிப்பு திட்டத்தில், பள்ளி மாணவிகளை விரைவில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்தார். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தபால்துறை அறிமுகப்படுத்திய செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஒண்டிபுதுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. கோவை கோட்ட முதுநிலை தபால்கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜகாரே பேசியதாவது
பிறந்த குழந்தை முதல், 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ 250 ரூபாய் செலுத்தி, தபால் நிலையங்களில் கணக்கு துவங்கலாம். அவசர தேவையெனில், ஐந்து ஆண்டு நிறைவில் கணக்கை முடித்து கொள்ளலாம்
அல்லது, 10-ம் வகுப்பு முடித்தவர்கள், தங்களின் மேற்படிப்புக்காக சேமிப்புத் தொகையில் பாதி அளவை பெற்றுக்கொள்ளலாம்.
இறுதியாக, 21 வயதில் கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆண்டுக்கு, 8.5 சதவீதம் வட்டி கிடைக்கும். வருங்காலத்தில்அனைத்து பள்ளி மாணவிகளையும் இத்திட்டத்தில், நுாறு சதவீதம் இணைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான முதல் முயற்சி இது.இவ்வாறு, அவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்