உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 29 (November 29 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 29, 2018

உலக வரலாற்றில் இன்று: நவம்பர் 29 (November 29 )



நவம்பர் 29 (November 29 ) கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.
1612 – சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்)
போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
1729 – நாட்செசு பழங்குடியினர்
மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.


1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற
சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
1783 – அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு
நிலநடுக்கம் ஏற்பட்டது.

1807 – நெப்போலியப் படைகள்
போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து
போர்த்துக்கலின் ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி
பிரேசிலுக்கு சென்றார்.
1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.
1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
1877 – தாமசு ஆல்வா எடிசன்
போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
1890 – சப்பானில் முதலாவது
நாடாளுமன்றம் கூடியது.
1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.
1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.
1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.

1929 – அமெரிக்கர் ரிச்சார்ட் பயேர்ட்
தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
1943 – இரண்டாம் உலகப் போர் :
அல்பேனியா விடுவிக்கப்பட்டது.
1945 – யுகோசுலாவியா சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 – முதலாம் இந்தோ-சீனப் போர்:
வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள், குழதைகளடங்கிய 300 பேரைப் படுகொலை செய்தனர்.
1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.
1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து
புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.
1963 – கனடிய விமானம்
மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.
1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை
ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.
1987 – தென் கொரிய விமானம் தாய் -
பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய
ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.
பிறப்புகள்
1803 – கிறிஸ்டியன் டாப்ளர் , ஆத்திரியக் கணிதவியலாலர், இயற்பியலாளர் (இ. 1853 )
1835 – டோவாகர் சிக்சி , சீனப் பேரரசி (இ. 1908 )
1901 – சோபா சிங் , இந்திய ஓவியர் (இ.
1986 )
1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ.
1957 )
1913 – எஸ். வி. சகஸ்ரநாமம் , தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1988 )

1913 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மேனிய-சோவியத் வானியற்பியலாளர் (இ. 1985)
1932 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர்
1936 – ஆ. வேலுப்பிள்ளை , ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015 )
1963 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1987)
1963 – லலித் மோடி, இந்தியத் தொழிலதிபர்
1977 – யூனுஸ் கான் , பாக்கித்தானியத் துடுப்பாளர்
1982 – ரம்யா , இந்திய நடிகை, அரசியல்வாதி
இறப்புகள்
1530 – தாமஸ் வோல்சி , இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் (பி. 1470)
1694 – மார்செல்லோ மால்பிகி , இத்தாலிய உயிரியலாளர், மருத்துவர் (பி. 1628 )
1872 – மேரி சோமர்வில்லி , இசுக்காட்டிய-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர்.
1924 – ஜாக்கோமோ புச்சீனி , இத்தாலிய இசையமைப்பாளர் (பி.
1858 )

1989 – அ. மருதகாசி , திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920 )
1993 – ஜெ. ர. தா. டாட்டா, பிரான்சிய-இந்தியத் தொழிலதிபர் (பி. 1904)
2008 – ஜோர்ன் உட்சன் , தென்மார்க்கு கட்டிடக்கலைஞர் (பி. 1918)
2010 – எஸ். சிவநாயகம் , இலங்கை ஊடகவியலாளர் (பி. 1930 )
2011 – இந்திரா கோஸ்வாமி , அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி. 1942)
2011 – எம். ஏ. அப்துல் மஜீத் , இலங்கை அரசியல்வாதி (பி. 1926 )
2013 – பாலகுமாரன் மகாதேவா , இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி.
1921 )

வெளி இணைப்புகள்
பிபிசி: இந்த நாளில்

நியூ யோர்க் டைம்ஸ் : இந்த நாளில்
கனடா : இந்த நாளில்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews