அரசுப் பள்ளிகளில் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மழலையர் பாடத்திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மழலையர் பாடத் திட்டம் தாய்மொழி தமிழில் உருவாக்கப்படுமா என்று கேட்கின்றனர். இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றும் அரசு தமிழுக்கு முன்னுரிமை வழங்கும். மாணவர்கள் ஆங்கிலம் கற்க வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால் ஆங்கிலத்திலும் கற்றுத்தரப்படும். ஜனவரி முதல் தேதியில் இருந்து 52 ஆயிரம் குழந்தைகளுக்கு மழலையர் பாடத் திட்டம் (எல்.கே.ஜி.) கற்பிக்க முதல்வரிடம் ஒப்புதல் பெற உள்ளோம். வளர்ந்து வரும் நவீன காலத்துக்கேற்பவும், மத்திய அரசு கொண்டு வரும் பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் வகையிலும் பாடத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளில் நடைபெறும் பாலியல் ரீதியான புகார்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், பள்ளிகி கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து பள்ளிகள் கண்காணிக்கப்படுகிறது. பள்ளிகளில் எந்தத் தவறு நடந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கோபி அருகே அளுக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 62 பயனாளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நேற்று விவசாய கடன் வழங்கினார்
விழாவில் அவர் பேசியதாவது:
மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் மற்றும் அதிகாரிகளிடம், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பினருக்கு, டேப் வழங்குவது குறித்து கடிதம் வழங்கப்பட்டுள்ளது
*ஜன., மாதம் இறுதிக்குள், நிதியளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனால், 11.12 லட்சம் மாணவர்கள், டேப் மூலம் பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்
*ஜன., மாதத்தில் 52 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, முதல்வரின் ஒப்புதலோடு, எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., வகுப்புகள் கொண்டு வரப்படும். டிச., மாதம் இறுதிக்குள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 11.17 லட்சம்மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்
*இதே வகுப்பினருக்கு ஜன.,மாதம் முதல் வாரத்தில்லேப்டாப் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க, வேண்டுகோள் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்
*திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில், அனைத்து பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதிக்கு, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்
&&