விதிமீறி மாணவர் சேர்க்கை: செமஸ்டர் தேர்வு கேள்விக்குறி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 20, 2018

விதிமீறி மாணவர் சேர்க்கை: செமஸ்டர் தேர்வு கேள்விக்குறி

விதிமீறி மாணவர் சேர்க்கை: செமஸ்டர் தேர்வு கேள்விக்குறி மதுரை காமராஜ் பல்கலையின் திருமங்கலம் உறுப்பு கல்லுாரியில் விதிமீறி சேர்க்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகியுள்ளது இக்கல்லுாரியில் ஒரு பாடப்பிரிவில் 72 மாணவர் சேர்க்க வேண்டும் என்ற பல்கலை விதிமீறி 2018 -19ல் 102 பேர் வரை சேர்க்கை நடந்தது. பலருக்கு வருகை பதிவேடும் பராமரிக்கப்படவில்லை  கடைசி தேதியான ஆக.,31க்கு பின்னும் பலர் சேர்க்கப்பட்டனர். அதேசமயம் கட்டணமாக ஆக.,31க்கு முன் எடுக்கப்பட்ட சலான்கள் சமர்ப்பித்தனர் இதன் அடிப்படையில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது இதுகுறித்து பதிவாளர், தேர்வாணையர், உயர்கல்வி செயலர் மற்றும் யு.ஜி.சி.,க்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் நவ.,ல் செமெஸ்டர் தேர்வு துவங்கவுள்ளது கூடுதலாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத இதுவரை அனுமதிக்கவில்லை. விதிமீறி பல்கலை அனுமதிக்குமா என கேள்வி எழுந்துள்ளது
விசாரிக்கப்படுமா சலான் மோசடி கடைசி தேதிக்கு பின் சேர்ந்த மாணவர் ஆக.,31க்கு முன் வங்கியில் பணம் செலுத்திய சலான்களை சமர்ப்பித்துள்ள பின்னணியில் ஆசிரியர், அலுவலர் இருப்பது தெரியவந்துள்ளது  ஆக.,31க்கு முன் 'கல்லுாரி முதல்வர்' கணக்கில் மொத்தமாக சிலர் வங்கியில் பணம் செலுத்தி முன்தேதியிட்ட சலான்களை எடுத்து வைத்துள்ளனர் அந்த சலான்களை கடைசி தேதிக்கு பின் சேர்க்கையான மாணவருக்கு ஒரு சலான் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். ஒரு சலானின் மதிப்பு 1285 ரூபாய் மட்டுமே  இதுகுறித்து விசாரிக்க பல்கலை நிர்வாகம் முன்வரவில்லை. மாணவர்கள் பெயர் இடம் பெறும் வகையில் சலான் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என பேராசிரியர் வலியுறுத்தியுள்ளனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews