Breaking

Friday, July 13, 2018

அரசு பள்ளியை அதிநவீன பள்ளியாக மாற்றிய தமிழக காவலர்!!



பழங்குடி கிராமமான குற்றியாரில் இருக்கும் அரசுப் பள்ளியை, சாம்சன் என்ற காவலர் அதிநவீன ஸ்மார்ட் பள்ளியாக மாற்றி, அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

அரசின் நிதி சுமையை குறைக்கும் வகையில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை, தமிழக அரசு மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் உள்ள பல கிராமங்களுக்கு கல்வி வசதி என்பது எட்டாத கனியாக இருந்து வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமமான குற்றியாரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. முறையாக பாரமரிக்கப்படாமல் இருந்த இந்தப் பள்ளியை, தனது சொந்த முயற்சியால், சாம்சன் என்ற நக்சல் தடுப்பு காவலர் அதிநவீன பள்ளியாக மாற்றியுள்ளார்.
பராமரிப்பில்லாமல் இருந்த அந்த பள்ளியை, காவலர் சாம்சன் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் வண்ணம் பூசி, புதிய சுவர்கள் மற்றும் கூரைகளை அமைத்துள்ளார். மேலும், சோலார் சக்தியால் இயங்கும் ஸ்மார்ட் வகுப்பறை, புதிய நூலகம் ஆகிய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்


இதுமட்டுமின்றி, மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு புதிய சீருடை, வகுப்பறையில் முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு உள்ளிட்ட அலங்கார பொருட்களையும் வாங்கிகொடுத்துள்ளார் காவலர் சாம்சன்.

இதுதவிர, பல பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை சந்திக்கும் சாம்சன், அவர்களுக்கு பல நற்பண்புகள் பற்றி பாடம் எடுக்கிறார். உதாரணமாக, மாணவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும் பழக்கம் உடைய சாம்சன், அந்த சாக்லெட் காகிதத்தை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுரையும் வழங்குகிறார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog