புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் பாடம் நடத்த முடியாது.
சமீபத்தில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. மேலும் அந்த புத்தகங்களில் 'க்யூ.ஆர்., கோடு' என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை 'ஸ்மார்ட்போன்' மூலம் 'ஸ்கேன்' செய்தால் அந்த புத்தகத்தை மின் நுாலாக படிக்கலாம்.
அனைத்து பாடங்களுக்கும் உரிய மதிப்பீடு, கேள்விகள், பாடம் சார்ந்த கூடுதல் தகவல், அதற்குரிய இணையதளங்கள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் ஆடியோ, வீடியோ வடிவிலும், கணிதத்திற்கு செயல்விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும்.
'க்யூ.ஆர்.,கோடு' பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பாடம் நடத்தும் போது கண்டிப்பாக 'ஸ்மார்ட்போன்' வைத்திருக்க வேண்டும். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி திறந்ததும் 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்,' என்றார்.
Search This Blog
Friday, May 25, 2018
Comments:0
இனி 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் ஆசிரியர் பாடம் நடத்த முடியாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.