அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 25, 2018

1 Comments

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்




அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேசுவதற்காக வெளிநாட்டு கல்வியாளர்கள் கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆண்டு 9ஆம் வகுப்பு படிக்கும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு இலண்டன், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 6 மாதகால ஆங்கில பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில் பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9-ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்றார்.
லண்டன், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

1 comment:

  1. இந்தியாவில் யாரும் படிக்கவில்லை போல அதனால் தான் லண்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து கல்வியாளர்களை அழைப்பு விடுக்கப் போகின்றனர்.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews