பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் 93.36 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.26 சதவீதம் அதிகமாகும். சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 70 சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,765 மாணவர்கள், 3,143 மாணவிகள் என மொத்தம் 5908 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில், 2,502 மாணவர்கள், 3,014 மாணவிகள் என மொத்தம் 5,516 மாணவ, மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.36 ஆகும். இது கடந்த ஆண்டை விட 0.26 சதவீதம் அதிகமாகும். Kaninikkalvi.blogspot.in
கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்தாண்டு 30 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறந்த செயல்பாட்டை பாராட்டி, மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
1 லட்சம் பரிசு தொகை
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 30 பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், தேர்ச்சி பெற்றதை ஊக்கப்படுத்தவும் அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பரிசு தொகையாக ₹1 லட்சம் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.