பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ல் தொடங்குகிறது Plus-2 supplementary exams begin on June 29.
பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ம் தேதியும், பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை 8-ம் தேதியும் தொடங்குகின்றன. இத்தேர்வுகளை 63,447 மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி வரையும், பிளஸ் 1 துணைத் தேர்வு (அரியர்) ஜூலை 8-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளை 233 மையங்களில் 63,447 மாணவர்கள் எழுதுகின்றனர்.
துணைத் தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக அரசு தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஜூன் 29 முதல் ஜூலை 16 வரை அனைத்து வேலைநாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை இது செயல்படும்.
9498383075, 9498383076 ஆகிய எண்களில் இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வு நாட்களில் வினாத்தாள் குறித்த புகார்கள், கருத்துகளை dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.