8-வது ஊதியக் குழு அமைக்கும் முதல் மாநிலம் அசாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 03, 2026

Comments:0

8-வது ஊதியக் குழு அமைக்கும் முதல் மாநிலம் அசாம்



8-வது ஊதியக் குழு அமைக்கும் முதல் மாநிலம் அசாம் - Assam becomes first state to set up 8th Pay Commission

மத்திய அரசுக்குப்பிறகு தனது ஊழியர்களின் ஊதியக் கட் டமைப்பை திருத்துவதற்காக 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை அசாம் பெற்றுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு ஏற்கெனவே ஊதியக் குழுவை அமைத்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு எந்த மாநில அரசும் ஊதியக் குழுவை இதுவரை அமைக் கவில்லை. அதை அமைக் கும் நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமை அசாமுக்கு தற்போது கிடைத்துள்ளது. இது ஊழியர்களின் நலன் மற்றும் முற்போக்கான நிர் வாகத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்றார்.

8-வது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக அசாம் உருவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்த முக்கியத் தகவல்கள்:

அறிவிப்பு: ஜனவரி 1, 2026 அன்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அறிவித்தார்.

தலைவர்: ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச் செயலாளர் சுபாஷ் தாஸ் (Subhas Das) தலைமையில் இந்த ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நோக்கம்: 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் ஜனவரி 1, 2026-டன் முடிவடைவதை முன்னிட்டு, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைக்க இது அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியத்துவம்: மத்திய அரசு ஏற்கனவே 8-வது ஊதியக் குழுவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், மாநில அளவில் இதனைத் தொடங்கும் முதல் மாநிலம் அசாம் ஆகும். இந்தக் குழு தனது பரிந்துரைகளை வழங்க சுமார் 18 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அசாம் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

மத்திய அரசுக்குப்பிறகு தனது ஊழியர்களின் ஊதியக் கட் டமைப்பை திருத்துவதற்காக 8-வது ஊதியக் குழுவை அமைக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை அசாம் பெற்றுள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு ஏற்கெனவே ஊதியக் குழுவை அமைத்துவிட்டது. ஆனால், அதற்குப் பிறகு எந்த மாநில அரசும் ஊதியக் குழுவை இதுவரை அமைக் கவில்லை. அதை அமைக் கும் நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமை அசாமுக்கு தற்போது கிடைத்துள்ளது. இது ஊழியர்களின் நலன் மற்றும் முற்போக்கான நிர் வாகத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews