Breaking

Monday, September 23, 2024

ஆசிரியையின் பணிநீக்கத்தை கண்டித்து ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணி

வேலூர் ஆசிரியையின் பணிநீக்கத்தை கண்டித்து ஆசிரியர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிய வேண்டும். - அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு

அனைவருக்கும் வணக்கம்🙏காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவிகள் செயலுக்காக ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது குறித்துக் கண்டித்து இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்ற அனைத்து வகை ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் 23.09.2024 திங்கட்கிழமை முதல் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் *கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிவது* என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுகுறித்து *திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிடுவது* எனவும் ஆசிரியரின் *பணியிடை நீக்கத்தை இரத்து செய்யும் வரை பல்வேறு வகைகளில் போராட்டம் தொடரும்* என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நன்றி🙏

இவண்

அனைத்து வகை ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog