மருத்துவப் படிப்பு கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 24, 2023

Comments:0

மருத்துவப் படிப்பு கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பு கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மருத்துப் படிப்பு இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள 35-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் ஒவ்வோா் ஆண்டும் சோ்க்கப்பட்டு மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றனா். இவற்றில் 85 சதவீத இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு மூலமாகவும், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வோா் ஆண்டும் மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக இருப்பதாகவும், அதற்குக் காரணம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மற்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஒரே சமயத்தில் நடைபெறாததுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுகள் நடந்து முடிந்த பின்னா் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 483 மருத்துவ இருக்கைகள் காலியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை திரும்பப் பெற தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும். இனி வருங்காலங்களில் மத்திய அரசுக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீடு ஆகியவற்றிற்கான கலந்தாய்வினை ஒரே நேரத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.


அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியிடம்

தமிழ்நாடு மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர்க்க நடவடிக்கை - OPS கோரிக்கை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள 35க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் சேர்க்கப்பட்டு மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர்.

இவற்றில் 85% இடங்கள் மாநில அரசின் ஒதுக்கீடு மூலமாகவும், 15% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.


இந்த ஆண்டு மூன்று கலந்தாய்வுகள் முடிந்த பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மட்டும் 483 மருத்துவ இருக்கைகள் காலியாக உள்ளதாக பத் திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

எனவே, முதல்வர் இதில் உடனடி கவனம் செலுத்தி, அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து இருக்கைகளையும் திரும்ப பெற்று அதனை தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகளை கொண்டு நிரப்பவும், எதிர்காலத்தில் ஒன்றிய, மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை ஒரே சமயத்தில் நடத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews