Breaking

Sunday, September 24, 2023

எண்ணும் எழுத்தும் ஆன்லைன் தேர்வுகளில் சிக்கல் - மன உளைச்சலால் ஆசிரியர்கள் தவிப்பு!

எண்ணும் எழுத்தும் ஆன்லைன் தேர்வுகளில் சிக்கல் - மன உளைச்சலால் ஆசிரியர்கள் தவிப்பு!

எண்ணும் எழுத்தும் ஓட்டத்தில், அரும்பு, மொட்டு, மலர்' மூன்று பிரிவுகளாக மாணவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். .

கேள்வித் தாள்ககும் 3 வகையாக பிரிக்கப்பட்டுளது. அரும்பு என்பது சுமாராக படிக்கும் மாணவர்கள், மொட்டு என்பது ஓரளவு படிக்க தெரிந்த மாணவர்கள் மலர் என்பது நன்கு படிக்க தெரிந்த மாணயர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது. மாணவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.

ஆன்ட்ராய்டு போன் இல்லா வாழ்க்கை

பள்ளிகளின் அன்றாட செயல்பாடுகளை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது. ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்தி உள்ளதாகவும், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் அடங்கிய டெலிகிராம் குருப்பில், ஓர் ஆசிரியர், எனக்கு ஆன்ட்ராய்டு போன் வேண்டாம் பட்டன் போன் போதும் அந்த வாழ்க்கைதான் எனக்கு மீண்டும் வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog