Breaking

Friday, September 22, 2023

பொதுத் தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

பொதுத் தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய மையங்களை அமைக்க கருத்துருக்களை அனுப்புவது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில்(2023-2024) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் தொடர்பாக கருத்துருக்களை கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி அனுப்பலாம். ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்:

அரசாணையில் உள்ள விதிகளின்படி இல்லாத பள்ளிகளை தேர்வு மையம் வேண்டி பரிந்துரை செய்து அனுப்பப்படும் அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்துக்கு பரிந்துரை செய்யப்படும்.

10 கிமீ தொலைவுக்கு மேல் பயணம் செய்து தேர்வெமுத தேர்வு மையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இதையும் படிக்க | மேல்நிலை பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் DGE அறிவுரைகள்!

இதையும் படிக்க | 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு -2024க்கு புதிய தேர்வு மையங்கள் DGE அறிவுரைகள்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog