நீட் தேர்வை எதிர்த்து நாளை திமுக போராட்டம் - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் - உதயநிதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 18, 2023

Comments:0

நீட் தேர்வை எதிர்த்து நாளை திமுக போராட்டம் - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் - உதயநிதி

நீட் தேர்வை எதிர்த்து நாளை திமுக போராட்டம் - மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் - உதயநிதி

"என்ன விமர்சனம், கேலி, கிண்டல் வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்

*போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்

*தேர்தல் பிரச்சாரத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என நான் உறுதி கொடுத்தேன்: அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம்

*நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன்: என்னை போல் அனைவரும் உணர வேண்டும்" - அமைச்சர் உதயநிதி

நீட் தேர்வு ரத்து தொடர்பான விஷயத்தில் முழு பொறுப்பதையும் ஏற்பதாக கூறி, அதில் மக்களை ஏமாற்றமாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை எதிர்த்து, நாளை தமிழக மாவட்ட தலைநகரங்களில் திமுக மாணவரணி, மருத்துவரணி, இளைஞரணி ஆகியவை சார்பில் கண்டன உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

ஆளுநரின் நிலைப்பாடு, மத்திய அரசின் செயல் போன்றவற்றை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

முழு பொறுப்பையும் ஏற்கிறேன்

அப்போது, நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பான பொறுப்பை உணர்வதாக குறிப்பிட்டு, நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும் மக்களை ஏமாற்ற மாட்டேன் என கூறினார்.

மேலும், நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் இந்த போராட்டத்தில் தங்களுடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews