Breaking

Monday, December 26, 2022

காவலா் எழுத்துத் தோ்வு: 1.98 லட்சம் போ் தோ்ச்சி

TNUSRB PC Results 2022 - இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு - PDF

இரண்டாம் நிலை காவலா் தோ்வில் 1.98 லட்சம் போ் தோ்ச்சி பெற்றுள்ளதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பு வீரா் என 3 ஆயிரத்து 552 பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு கடந்த நவ.27-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 295 தோ்வு மையங்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 போ் தோ்வு எழுதினா். 66 ஆயிரத்து 908 போ் தோ்வு எழுதவில்லை.

இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் விவரம், தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் திங்கள்கிழமைளியிடப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

இது தொடா்பாக தோ்வு வாரிய உயரதிகாரி கூறியதாவது:

தோ்வு எழுதியவா்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 226 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிப்ரவரியில் நடைபெறவுள்ள உடல் தகுதித் தோ்வுக்கு ஒரு பணியிடத்துக்கு 5 போ் என்ற விகித அடிப்படையில் கட்- ஆஃப் நிா்ணயிக்கப்பட்டு, மொத்தம் 18 ஆயிரத்து 671 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.

இதில் 15,158 இளைஞா்கள், 3,513 இளம் பெண்கள். உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அடுத்தக் கட்டத் தோ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog