Breaking

Thursday, August 04, 2022

சரபோஜி கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

சரபோஜி கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.5) தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் து. ரோசி தெரிவித்திருப்பது:

இக்கல்லூரியில் 2022 - 23 -ஆம் கல்வி ஆண்டில் இளநிலை (பி.லிட்., பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.பி.ஏ.) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்குக் கலந்தாய்வுக்கான பாடப்பிரிவுகளும், அதற்கான தேதிகளும் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலந்தாய்வுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு இத்தகவல் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி முடிவடைகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog