ஆசிரியர்கள் பள்ளியில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.. மாணவர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 25, 2022

Comments:0

ஆசிரியர்கள் பள்ளியில் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.. மாணவர்களை சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக அனைத்துப் பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதன்படி

*தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளி தொடங்கும் முன்னே வந்து விட வேண்டும்

*பள்ளியில் மாணவர்களின் சண்டை,சாலை விபத்து, பாலியல் வன்முறை உள்ளிட்ட எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்

*பேருந்துகளில் வரும் மாணவர்கள் மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பதை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

*பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறைவிட்டால் அது குறித்தும் முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

இதையும் படிக்க | Palli Paarvai TNSED Administrators App - New User Manual

*பழுதான கட்டிடத்திலோ , மரத்தடியிலோ வகுப்பு நடத்தக் கூடாது *தனியார் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா?விடுதிக் கட்டடங்கள்,தீ தடுப்பு ஏற்பாடுகள் உரிய அனுமதி பெற்று உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

*மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து தரத்தையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.

*ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையில் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

*மாணவர்களை எந்த காரணம் கொண்டும் ஆசிரியர்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தக் கூடாது.

*மாணவர்களுக்கு அவர்களின் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித தண்டனையும் வழங்கக்கூடாது.

இதையும் படிக்க | பெரியார் ஆயிரம் வினா விடை போட்டி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

*மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பாடு பயிற்சி அளிக்க வேண்டும்.

*பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews