Breaking

Friday, July 01, 2022

"தேர்தல் வாக்குறுதிகளையே மறந்துவிட்டார்..." - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஆவேசம்

ஆசிரியர் காலிப்பணியிடங்களில், டெட் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர்களை நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் 177 வாக்குறுதியின்படி, 2013ஆம் ஆண்டு முதல் TET தேர்வெழுதி தகுதி பெற்று பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களை தற்காலிக பணி நியமனம் செய்வது ஏன் என்றும் வினவியுள்ளார். TET தேர்வெழுதி பணிக்காக காத்திருப்போரை முறைப்படி காலமுறை ஊதியத்துடன் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog