Breaking

Sunday, July 24, 2022

கனியாமூர் பள்ளி மாணவர்கள் படிப்புக்கு நடவடிக்கை: எம்.பி., மனு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி பள்ளி மாணவர்கள் கல்வி பாதிக்காத வகையில், படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் எம்.பி., கோரிக்கை மனு அளித்தார்.

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி., கவுதம சிகாமணி அளித்துள்ள மனு:சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மான முறையில் இறந்தார். இதனையடுத்து, பள்ளியில் நடந்த விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனால், 4,000 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிக்க | மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

கலவரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.உடனடியாக மாணவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கல்வி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்காத வகையில், அவர்கள் படிப்பைத் தொடர ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog