Breaking

Wednesday, May 11, 2022

பள்ளி கல்வி நேரத்தை மாற்றி அமைக்க மத்திய கல்வி வாரியம் வலியுறுத்தல்

மத்திய கல்வி வாரியம்

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகல்வி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கடுமையான வெப்பம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: பள்ளி கல்வி நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தல்

நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும். நாடு முழுவதம் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு துவங்கி மதியத்திற்குள் முடிக்கலாம். பள்ளிகளில் நடத்தப்படும் காலை நேர வழிபாட்டை நிழல் உள்ள பகுதிகளில் நடத்த வேண்டும்.

கோடை வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் வெளி விளையாட்டுக்களை காலை நேரத்திலேயே நடத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் அதிகஅளவிலான மாணவர்களை ஏற்ற கூடாது. முதலுதவி பெட்டி அவசியமாக வைத்திருக்க வேண்டும். என இவ்வாறு அவை வலியுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog