Breaking

Thursday, May 12, 2022

போராட்டம் இல்லை; முதல்வரை சந்திக்க முடிவு - ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு

ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக, போராட்டம் நடத்தும் முன், முதல்வரை சந்தித்து மனு அளிக்க, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சாத்தியமில்லை என்றும், நிதி அமைச்சர் தியாகராஜன் கை விரித்து விட்டார். இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம், நேற்று சென்னையில் அவசரமாக கூடியது.
முதல்வரை சந்திக்க முடிவு

ஒருங்கிணைப்பாளர்கள், செல்வம், சேகர் மற்றும் காந்திராஜ் தலைமை வகித்தனர். 18 சங்க நிர்வாகிகள் பங்கேற்று, கருத்துகளைதெரிவித்தனர். தற்போதைய நிலையில் போராட்டம் நடத்துவதை விட, முதல்வரை சந்திக்க முயற்சிக்கலாம் என, முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்கவும்; நிதி அமைச்சரின் பேச்சுக்குகண்டனம் தெரிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog