தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை - 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 02, 2022

Comments:0

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை - 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Breaking News: 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும்

தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது

6-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்

- பள்ளிக்கல்வித்துறை

1-5 ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதிதேர்வு கிடையாது என்றும் 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது:

ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது. அதே போல் 6-9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் மே மாதம் 5 ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30 ம் தேதி வெளியிடப்படும்.

9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2-4 ம் தேதி வரை நடைபெறும்.

2022-23 ம் ஆண்டு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews