Breaking

Wednesday, March 30, 2022

ஏப்.4 முதல் 7ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரத்தவறினால் தற்காலிக தேர்வு ரத்து

புதுச்சேரியில் 390 காவ லர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி அதிகாலை வெளி யிடப்பட்டது. காவலர் பணிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வயது, கல்வி, வசிப்பிட, நேட்டிவிட்டி, சாதி உள் ளிட்ட அசல் சான்றிதழ் களுடன் கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதா யக் கூடத்தில் உள்ள இணைப்பில் குறிப்பிடப் பட்டுள்ள அட்டவணை யின்படி, சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஆஜராக வேண்டும். மேலும், சமீ பத்திய 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டுவர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப் பின் போது மேற்கண்ட சான்றிதழ்களின் சுய- சான்றளிக்கப்பட்ட ஜெராக்ஸ் நகலின் ஒரு செட் சமர்ப்பிக்கப் பட வேண்டும். 103 பேருக்கு வரும் 4ம் தேதி காலை 9 மணிக்கும், 100 பேருக்கு 5ம் தேதி காலை 9 மணிக்கும், 100 பேருக்கு 6ம் தேதி

காலை 9 மணிக்கும, 87 பேருக்கு 7ம் தேதி காலை 9 மணிக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப் புக்கு வரத்தவறினால் தற்காலிக தேர்வு ரத்து செய்யப்படும். மேலும் விவரங்களை காவல் துறை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இத்தக வலை காவல்துறை சிறப்பு பணி அலுவலர் குபேரசிவகுமரன் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog