Breaking

Saturday, March 12, 2022

இளம் விஞ்ஞானிக்கு 150 மாணவர்கள் தேர்வு!

இளம் விஞ்ஞானிக்கு 150 மாணவர்கள் தேர்வு

இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ பெங்களூரில் அமைந்துள்ளது அங்கு மாணவர்களுக்கு சில நாட்கள் விஞ்ஞானம் பற்றி பயிற்சி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இந்தியாவில் மட்டும் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு மே 16 முதல் 28 ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும். மேலும் இந்த பயிற்சியின் போது மாணவர்கள் அங்கேயே தங்கி நின்று தான் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு எட்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் அறிவியல் கண்காட்சியில் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கும் மாணவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog