பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 05, 2021

Comments:0

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

மார்ச் 2021 , இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு தொடர்பாக அச்சடித்து வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் ஏதேனும் பள்ளிகளிலிருந்து பெறப்படின் , உதவி இயக்குநர்கள் அதனைத் தொகுத்து பட்டியலிட்டு தகுந்த ஆதாரங்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள நகலுடன் இணைத்தனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. தற்காலிகச் சான்றிதழில் பதிவுகள் சரியாக இருப்பின் அதன் நகலை இணைத்தனுப்ப வேண்டும் . தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டது )

2. தேர்வரின் பிறந்த தேதி , முகப்பெழுத்து மற்றும் பெயர் திருத்தங்கள் ( தமிழ் / ஆங்கிலம் ) எனில் மாற்றுச்சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை இணைத்தனுப்ப வேண்டும் . ( தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டது ) 3. தந்தை / தயார் பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ) ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட ஆளறிச்சான்றிதழ் ( Bonafide Certificate ) இணைத்தனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews