Breaking

Monday, October 11, 2021

பள்ளி மாணவா்களுக்கு மதிப்பீட்டுத் தோ்வு: ஆணையா் உத்தரவு

"தமிழகத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு மதிப்பீட்டுத் தோ்வு நடத்த பள்ளிக்கல்வி ஆணையா் கே.நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா பாதிப்பால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9, 10 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல், கணினிபயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கும் தலா 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு உயா்தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் மதிப்பீட்டுத் தோ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியா்களும் இந்த மதிப்பீட்டுத் தோ்வை அக்.12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிக்குள் ஒருமணி நேரம் காலஅவகாசம் வழங்கி நடத்த வேண்டும். ஒவ்வொரு குழு மாணவா்களுக்கான மதிப்பீடு முடிந்த பின்னா் உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவா்களை அமரவைத்து, ஆசிரியா்கள் இணைய வசதியைப் பயன்படுத்தியும் இந்த மதிப்பீட்டை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog