Breaking

Wednesday, September 01, 2021

பள்ளிகளில் இன்று முதல் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் - 45 நாட்கள் ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும் - கல்வித்துறை முக்கிய அறிவுரை

பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குனர் சுதன் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:

தூய்மை நிகழ்வுகள் - 2021 என்ற திட் டத்தின்கீழ் அனைத்து வித பள்ளிகளிலும் இன்று முதல் 15ம் தேதி வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று செப்.1ம் தேதி தூய்மை உறுதிமொழி தினம் கடைப்பி டிக்கப்படுகிறது. நாளை 2ம் தேதி சமூக விழிப்புணர்வு தினமும், செப். 4 மற்றும் 5ம் தேதிகளில் பசுமைப்பள்ளி இயக்க நாட்களாகவும், 6 மற்றும் 7ம் தேதிகளில் தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்பது, செப் டம்பர் 8ம் தேதி கைகழுவுதல் தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது. செப். 9 மற்றும் 10ம் தேதிகளில் தன் சுத்தம் மற்றும் சுகாதாரம், செப். 11, 12ம் தேதிகளில் தூய்மை நிகழ்வு கண்காட்சி, செப். 15ம் தேதி பரிசுகள் வழங்குதல் என இந்தஅட்டவணைப்படி நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று முதல் அடுத்த மாதம் 31ம் தேதி வரை 45 நாட்கள் மாணவர் களுக்கு ஆற்றுப்படுத்துதல் (ரெப்ரஸ் கோர்சஸ்) நடத்தவும் அதற்கான அட்ட வணை தயாரித்து அதன்படி பல்வேறு தலைப்புகளில் மாணவர்களை ஈடுபடுத்த வும். ஊக்கப்படுத்தவும் அறிவுறுத்தப்பட் டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதால் உடல் மற்றும் மனரீதியில் அவர்களை தயார்படுத்த இந்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog