மகளிர் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

மகளிர் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

.com/img/a/
கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பட்டய பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்,' என, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.கோவை ராஜவீதி அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அறிக்கை: கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 2021 -22ம் ஆண்டுக்கான பட்டய பயிற்சி சேர்க்கைக்கு, https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். பிளஸ் 2வில், அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.சி., பிரிவினருக்கு பிளஸ் 2வில், 50 சதவீதம் மதிப்பெண்கள்; எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு, 45 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.பி.சி., எம்.பி.சி., 30 வயதுக்குள்; எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், 35 வயதுக்குள்; ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வி கட்டணமாக, முதலாமாண்டு, ஐந்தாயிரம் ரூபாய்; இரண்டாமாண்டு, 1,500 ரூபாயாகும். அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.வரும், 27ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அணுகலாம்.தொலைபேசி எண், 0422 2399315 மற்றும் மொபைல் எண், 73730 03375 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews