Breaking

Thursday, July 29, 2021

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு - விரைவில் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.- (பத்திரிக்கை செய்தி)
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு
விரைவில் அறிவிப்பு வெளியாகும்

சென்னை, ஜூலை 28: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக விலைப்படி வழங்குவதற்கான முடிவை தமிழக அரசு எடுத்துள்ள நிலையில், அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப் படஉள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த ஆண்டு ஏப்ர லில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கான உத்தரவில், 2021-ஆம் ஆண்டு ஜூலை வரையில் அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்று காரணமாக, மத்திய அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கு வது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அண்மையில் பிரத மர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான முடிவு எட்டப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம், தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வினை அறி விப்பது வழக்கம். மேலும், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப் படையில், அகவிலைப்படி உயர்வு வழங்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் காலமான ஜூலை மாதம் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.

1 comment:

  1. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் போன்றோர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
    01/01/2020 முதல் இலவு காத்த கிளி போல் ஆகி வருகிறது.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog