நீட் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 16, 2021

Comments:0

நீட் தேர்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முதல்வர் கோரிக்கை!

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர்களுடனான காணொலி ஆலோசனையில் முக ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் கோரிக்கை:

இந்தியா முழுவதும் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பிரிவுகளில் சேர மாணவர்கள் நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. இந்த நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழை மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சியை பெற முடிவதில்லை. அதனால் தேர்வை சந்திப்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் ஏழை தமிழக மாணவர்களின் மருத்துவர் என்ற கனவு கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தார். அதன்படி டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்தார். இந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வின் தேதியை அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வின் வினாத்தாளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனா பரவல் சூழல் குறித்து பிரதமர் அவ்வப்போது காணொலி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று நடந்த காணொலி ஆலோசனையின் போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews