Breaking

Wednesday, June 09, 2021

நோட்டரி பப்ளிக் அங்கீகாரம்: வக்கீல்கள் விண்ணப்பிக்கலாம்

நோட்டரி பப்ளிக் அங்கீகாரம்: வக்கீல்கள் விண்ணப்பிக்கலாம்
கோவை சேர்ந்த வக்கீல்கள், மத்திய அரசு நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெறுவதற்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப்படிப்பு முடித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள், ஏழு ஆண்டுகள் கோர்ட்டில் வழக்கு நடத்திய அனுபவம் இருந்தால், நோட்டரி பப்ளிக் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம். மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், நோட்டரி அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய நோட்டரி பப்ளிக் நியமனம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் பதிவாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட நீதித்துறை நிர்வாகம் நோட்டீஸ் போர்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://legalaffairs.gov.in/notary-cell என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog