தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலருக்கு கொரோனா தொற்று உறுதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 30, 2021

Comments:0

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் ஐஏஎஸ் தீரஜ்குமார் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஆசிரியர்களுக்கு ஒரு நாள் மீளாய்வு பணிமனை! கொரோனா தொற்று: கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நோய் தாக்கத்துக்கு ஆளாகின்றனர். இரண்டாயிரத்துக்கும் அதிகமாக பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் வைரஸ் தாக்கத்தினால் தினமும் 16 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்படுகிறது. அதனால் மாநிலங்கள் தோறும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய் தாக்கத்தினால் பல பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தாக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60- ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு.
முதன்மை செயலாளர் தீரஜ்குமார் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் முதல் தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். கல்வித்துறை பணிகளில் ஈடுபட்டு வந்த இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews