Breaking

Tuesday, March 16, 2021

உலகளாவிய ஆசிரியர் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!

தேசிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை, சர்வதேச அரங்கில், உலகளாவிய ஆசிரியர் - விஸ்வ குரு என்ற உயர்வை பெற்றுத்தரும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்!!!
தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேவையான புத்தாக்க மாற்றத்தை அனைவருக்கும் சமமாகவும், தரமாகவும், எளிதாக அணுகும் வகையிலும் இந்த தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இக்கொள்கை சார்ந்து 2.5 லட்சத்திற்கும் அதிகமான ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன என்றும், 33 கோடி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், 1.1 கோடி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை வேந்தர்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி முதல்வர்கள், கிராமம் முதல் நாடாளுமன்றம் வரை, இதுவரை உலகம் காணாத விரிவான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை தேசிய கல்விக் கொள்கை கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog