Breaking

Saturday, March 20, 2021

அதிகரிக்கும் கொரோனா தொற்று!: தமிழகத்தில் வரும் 22ம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு.
தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் விடுமுறை அறிவிப்பு
9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் - தமிழக அரசு.
மாணவர்கள் நலன் கருதி வரும் 22ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகின்ற 22ம் தேதி முதல் மறுஉத்தரவு வரும் வரை 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வேண்டியுள்ளதால் வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog