6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு – மணிப்பூர் மாநில அரசு முடிவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 06, 2021

Comments:0

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மார்ச் 8 முதல் பள்ளிகள் திறப்பு – மணிப்பூர் மாநில அரசு முடிவு!!

மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் 8 தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தொற்று பாதிப்பு: கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. தற்போது தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. பள்ளிகள் திறப்பு: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டாலும், பள்ளிகளை தகுந்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற கல்வித்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் 8ம் தேதி முதல் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளுக்கு பதிலாக மதிப்பீட்டு முறையை செயல்படுத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews