9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 18, 2021

Comments:0

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை நேரடியாக எழுத்து முறையில் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மாணவர் விடுதிகளில் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்!

9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள்:
நடப்பு கல்வியாண்டிற்கான 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நேரடியாக கட்டாயம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களின் தகுதி சரியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகள் சரியாக இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் வாரிய தேர்வுகள் 2021 ஏப்ரல் 15 முதல் தொடங்கும் என்பதால் அரசுப் பள்ளிகள் ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து 9, 11 வகுப்புகளுக்கான தேர்வுகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wanted Teachers.

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews