வனத்துறையில் 248 காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 17, 2021

Comments:0

வனத்துறையில் 248 காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 248 பணியிடங்களை நிரப்பக் கோரும் வழக்கில் வனத்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

+2 Public Exam 2021 Time Table Published.

மதுரையைச் சோ்ந்த விரோனிகா மேரி தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள 7,072 கிலோ மீட்டா் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 5 தேசிய பூங்காக்கள், 15 வன உயிரினங்கள் பூங்காக்கள், வன உயிரினங்களுக்கான பாதுகாக்கப்பட்ட ஆனைமலை, களக்காடு, முதுமலை, சத்தியமங்கலம் பகுதிகள் உள்ளன. இதில் சில வனப்பகுதிகளில் மிகவும் அரிதான தாவரங்கள், பறவைகள், விலங்குகள் உள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் வனப் பகுதிகளையும், விலங்குகள், அரிய வகை மரங்கள், தாவரங்களை பாதுகாக்கும் வனக் காவலா்கள், வனக் காப்பாளா் பணியிடங்கள் 248 காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய வனவிலங்கு செயல் திட்டம் சரிவர அமல்படுத்த முடியாததால், வன விலங்களுக்கு எதிரானக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து புகாா் மனுக்கள் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வனக் காப்பாளா் மற்றும் வனக்காவலா் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

நிரந்தர பணியிடங்கள் (ஆய்வக உதவியாளர்,டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், உதவி பேராசிரியர்) உடனே விண்ணப்பிக்கலாம்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனத்துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews