பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்த தகவல்களை இந்த செல் எண்& தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 09, 2020

Comments:0

பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்த தகவல்களை இந்த செல் எண்& தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வகங்கையில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. சிவகங்கை ஒன்றியத்தில் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் பள்ளி செல்லா, இடைநின்ற பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபாராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், லதாதேவி, பிரான்சிஸ் ஜஸ்டின் ஒருங்கிணைப்பில் நவ.21 முதல் தொடங்கிய இப்பணி நாளை வரை நடக்கிறது. புலம் பெயர்ந்தவர்கள் வேலைசெய்யும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள் கட்டிடப் பணி, சாலைப் பணி நடக்கும் இடங்கள் மற்றும் உணவு விடுதிகள், அனைத்து குடியிருப்பு மற்றும் அனைத்து கிராமங்களிலும் இக்கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. சிவகங்கை காமராஜர் காலனியில் நடைபெற்ற பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் காளிராசா, ஆறுமுகம், ஜெயப்பிரகாசம், செல்வராணி, சிறப்பாசிரியர் இளமாறன் ஈடுபட்டனர். பள்ளிசெல்லா குழந்தைகள் குறித்த தகவல்களை 9788858953 என்ற செல் எண், 04575 245978 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews