பதவி உயர்வுக்கான தேர்வுகள் நீதித்துறை தேர்வாணையம் மீது குறை கூறிய புகார்: உயர் நீதிமன்றம் அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 02, 2020

Comments:0

பதவி உயர்வுக்கான தேர்வுகள் நீதித்துறை தேர்வாணையம் மீது குறை கூறிய புகார்: உயர் நீதிமன்றம் அதிரடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வக்கீல்களுக்கு நீதித்துறை தேர்வாணையம் நடத்திய தேர்வில் சில கேள்விகளுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.வக்கீல்களுக்கு பதவி உயர்வு அளிப்பதற்காக டெல்லி மாநில நீதித்துறை கல்வி மற்றும் பயிற்சி கமிட்டி சார்பில் நடத்தப்படும் தொடக்க நிலை தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. தேர்வுக்கு ஆஜராகிய வக்கீல் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டில், ‘‘கமிட்டியின் தொடக்க நிலை தேர்வுகளில் ஒரு சில கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதில்கள் பொருந்தாது. விரிவான விளக்கம் கூறும் விதமாக கேள்விகள் அபத்தமாக கேட்கப்பட்டு இருந்தது. எனவே, உயர் நீதிமன்ற பதிவாளர் தரப்பில் 3 கேள்விகளுக்கு பதில்கள் திருத்தி அறிவிக்கப்பட வேண்டும், மேலும் ஒரு கேள்வியை தேர்வில் இருந்து நீக்கி அறிவிக்க வேண்டும்’’, என கோரப்பட்டது.விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட மனுவை நேற்று படித்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் சஞ்சீவ் நருலா ஆகியோர், ‘‘எந்த கேளவிகளுக்கான பதில்களை திருத்த வேண்டும், எந்த கேள்வியை நீக்க வேண்டும், கேள்விக்கான பதிலில் உள்ள தவறு என்ன என்று ஒரு விளக்கமும் மனுவில் இல்லை. எனவே இந்த மனுவை விசாரிப்பதில் பலனில்லை’’, எனக் கூறி தள்ளுபடி செய்து அறிவித்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews