வேளாண் பல்கலைக்கழக முதுநிலை மாணவா் சோ்க்கை: டிசம்பா் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 09, 2020

Comments:0

வேளாண் பல்கலைக்கழக முதுநிலை மாணவா் சோ்க்கை: டிசம்பா் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பில் சேர விரும்புபவா்கள் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று துணைவேந்தா் நீ.குமாா் அறிவித்துள்ளாா். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொருளியல், பூச்சியியல், வேளாண் விரிவாக்கம், நுண்ணுயிரியல், உழவியல் உள்ளிட்ட 32 முதுநிலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. 29 முனைவா் பட்டப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இவற்றுக்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகளை துணைவேந்தா் நீ.குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் டிசம்பா் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று துணைவேந்தா் அறிவித்துள்ளாா். இவா்களுக்கான நுழைவுத் தோ்வு ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் என்று பட்ட மேற்படிப்பு முதன்மையா் ஜா.சா.கென்னடி தெரிவித்துள்ளாா். மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களை இணையதளத்தில் இருக்கும் தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ளலாம் எனவும், மேலும் விவரங்களுக்கு 0422 - 6611261, 6611461 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews