மண்ணெண்ணெய் விளக்கில் படிப்பு... பீஸ் கட்டிய சிவகார்த்திகேயன்!- சாதித்து காட்டிய மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 20, 2020

Comments:0

மண்ணெண்ணெய் விளக்கில் படிப்பு... பீஸ் கட்டிய சிவகார்த்திகேயன்!- சாதித்து காட்டிய மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

மண்ணெண்ணெய் விளக்கில் படித்த மாணவிக்குநடிகர் சிவகார்த்திகேயேன் செய்த உதவி காரணமாக மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவி சகானா. இவரது பெற்றோர் கணேசன், சித்ரா தையல் தொழில் செய்து வருகின்றனர், மூத்த சகோதரி தேவிபாலா டிகிரி படித்துள்ளார். சகானா பேராவூரணியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். பொதுத்தேர்வில் 524 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தார். எனினும், நீட் தேர்வு எழுதியதில் இவரால் தேர்ச்சிபெற மட்டுமே முடிந்தது, மருத்துவ படிப்பில் சேர்வதற்னான கட் ஆப் மதிப்பெண் கிடைக்கப்பெறவில்லை. மாணவி குறித்து விவரம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் மாணவி சகானாவை தனியார் நீட் பயிற்சி மையத்தில்சேர்ந்து பயிற்சி பெற நிதியுதவி செய்தார்.

image

இந்நிலையில், ‘ நீட் தேர்வில் வெற்றிபெற்ற சகானாவுக்கு தற்போது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து மாணவி மற்றும் அவரது குடும்பத்தார்கள் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்ததோடு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய அரசுக்கும் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.

வீட்டில் மின் இணைப்பு இல்லாத காரணத்தினால் மண்ணென்ணெய் விளக்கில் படித்து வந்தவர் மாணவி சகானா என்பது குறிப்பிடித்தக்கது.

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews