மருத்துவ படிப்பில் பொது பிரிவினருக்கான தரவரிசை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 24, 2020

Comments:0

மருத்துவ படிப்பில் பொது பிரிவினருக்கான தரவரிசை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ படிப்பில், முதன் முறையாக, பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில், முதல், 15 இடங்களை பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. இதனால், 16வது இடம் பிடித்த மாணவர்களிடம் இருந்து சேர்க்கை துவங்கியது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, ௭.௫ சதவீத இட ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கில், 399 இடங்கள்; சிறப்பு பிரிவில், 60 இடங்கள் நிரம்பின.இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ் என, 4,984 இடங்களுடன், பொது பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது. தரவரிசையில், முதல், 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில், தரவரிசையில், முதல், 15 இடங்களை பெற்றவர்கள் பங்கேற்கவில்லை; முதல், ௫௦ இடங்களில், ௩௦ பேர் பங்கேற்கவில்லை. இதனால், 16வதாக இருந்த, வருண் முதல் நபராக ஒதுக்கீடு பெற்றார்.இதைத் தொடர்ந்து, முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்கள், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சேர்க்கை ஆணை வழங்கினார்.பின், அவர் அளித்த பேட்டி:தரவரிசை பட்டியலில் முதல், 10 இடங்களை பெற்ற மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை பெற்றிருக்கலாம். ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கில், இடங்களை பெற்று சேராத மாணவர்கள் மூன்று பேருக்கு, தற்போது சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பும். இவ்வாறு, அவர் கூறினார்.ஒத்தி வைப்பு மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வ ராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:இன்று முதல் நடக்க இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், புயல் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இன்று நடக்க இருந்த கவுன்சிலிங், 30ம் தேதி நடைபெறும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து விரிவான விபரம், https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்படும். கவுன்சிலிங்கிற்கு, ஏற்கனவே சென்னை வந்தவர்களுக்கு, சுகாதார துறை சார்பில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. 3 மாணவிக்கு சேர்க்கை ஆணைஅரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள, 405 இடங்களில், 399 இடங்கள் நிரம்பின. சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, ஆறு இடங்கள் நிரம்பவில்லை. கவுன்சிலிங்கின்போது, அரசு மருத்துவ கல்லுாரி இடங்களை தயக்கமின்றி மாணவர்கள் தேர்வு செய்தனர். ஆனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் அதிக கட்டணம் என்பதால், சேர்க்கையை உறுதி செய்தும், சிலர் அதற்கான ஆணையை பெறாமல் சென்றனர். இதைத்தொடர்ந்து, மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணத்தை அரசு செலுத்தும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஆணையை பெறாமல் சென்ற மாணவியர் திவ்யா, கவுசிகா, தாரணி ஆகிய மூன்று பேரை, மருத்துவ கல்வி இயக்ககம் அழைத்து, 'நீங்கள் 1 ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல், கல்லுாரிகளில் சேரலாம்' என, நேற்று சேர்க்கை ஆணையை வழங்கியது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews