அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் கடந்த 3 ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 10, 2020

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் கடந்த 3 ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறித்து, கூடுதல் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த ப்ரீத்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் 245 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை சேர்த்து புதிதாக அரசாணை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, ‘‘அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கும் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்’’ என்றனர். இதுதொடர்பான விபரத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இந்த விபரத்தை கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 20க்கு தள்ளி வைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews