அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்புப் பணி குறித்து ஒத்திகை நிகழ்ச்சி... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 12, 2020

Comments:0

அரசுப் பள்ளியில் பேரிடர் மீட்புப் பணி குறித்து ஒத்திகை நிகழ்ச்சி...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வடகிழக்கு பருவ மழையின் போது மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சார்பில் சின்னபள்ளத்தூர் அரசுப் பள்ளியில் திங்கள் கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் முன்னரே தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குத் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கோபால் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பருவமழையின் போது தாழ்வான பகுதிகளில் வசிக்க மீட்கும் முறை, தீ விபத்துக்கள் ஏற்படும் போது பொது மக்களைக் காப்பாற்றும் முறை, கிணற்றில் தவறி விழுபவர்களைக் காப்பாற்றும் முறை, மின்சார விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறை, ஆறுகளில் அடித்துச் செல்லுபவர்களை மீட்பது மற்றும் நிலச் சரிவுகளின் போது இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்து ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் சின்னப்பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த 15 இளைஞர்களைத் தேர்வு செய்து பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டு, பருவ மழைக் காலங்களில் மீட்புப் பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என நிலைய அலுவலர் தெரிவித்தார். இதில் நிலைய போக்குவரத்து அலுவலர் நாகநாதன், சின்னப்பள்ளத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, தீயணைப்பு வீரர்கள் சிவகுமார், ஞானப்பிரகாசம், நரசிம்மன், முத்துகிருஷ்ணன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews