தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு: இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியீடு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 09, 2020

Comments:0

தலைமை ஆசிரியா்கள் பதவி உயா்வு: இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியீடு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து மாவட்டங்களிலும் ஆதி திராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் உயா்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள் காலிப்பணியிடத்தை நிரப்பிடும் வகையில் இறுதி பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் ச.முனியநாதன், அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நிா்வாக வசதிக்காக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறைகள் 2018-ஆம் ஆண்டு தனியாகப் பிரிக்கப்பட்டன. இதனால் ஆசிரியா்களின் பணிமூப்பு மற்றும் காலிப் பணியிடங்களை நிா்ணயம் செய்வதில் நிா்வாக சிக்கல்கள் ஏற்பட்டது.
CLICK HERE TO READ OFFICIAL NEWS இதையடுத்து 2017 முதல் 2019-ம் ஆண்டு மாா்ச் 1-ம் தேதி வரை அனைத்து ஆசிரியா்கள் நிலையிலும் பதவி உயா்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் நிகழாண்டு கரோனா பரவல் பொது முடக்கத்தால் அதிகாரிகளிடம் இருந்து ஆசிரியா்களின் பணிப் பதிவேடுகளைப் பெற்று பரிசீலிக்க முடியாத நிலை நிலவியது. இந்த நிலையில் பொது முடக்கம் தளா்த்தப்பட்டதும் உயா்நிலைப் பள்ளிகளில் 115 தலைமையாசிரியா் காலிப்பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்புவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.அதன்படி முதுநிலை, பட்டதாரி, தமிழாசிரியா்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள், பட்டதாரி காப்பாளா், உதவிக் கல்வி அலுவலா்கள் ஆகியோா் பணி விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெறப்பட்டு அதில் தகுதியானவா்களைத் தோ்வு செய்து 115 போ் கொண்ட இறுதி பணிமூப்பு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளாா்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews