கொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா? மீண்டும் தேர்வு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 12, 2020

Comments:0

கொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா? மீண்டும் தேர்வு அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுத் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு மீண்டும் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நீட் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி தற்போது, கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு வரும் 14ம் தேதியன்று மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் தேர்வுகளுக்கான முடிவுகளை அக்டோபர் 16-ம் தேதியன்று தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14-ம் தேதி தேர்வு நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி தேசிய தேர்வு முகமை அமைப்பினால் நடத்தப்பட்டது. அதேப்போன்று ஜே.இ.இ தேர்வும் அதே மாதம் 1 முதல் 6ம் தேதிவரை நடத்தி முடிக்கப்பட்டு அதன் முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனோ வைரஸ் தொற்று காரனத்தினால் மேற்கண்ட தேர்வுகளை எழுதாமல் பல மாணவர்கள் தவிர்த்து விட்டனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டை விட 13 சதவீத மாணவர்கள் தற்போது நீட் தேர்வை எழுதவில்லை. இதே நிலை தான் நாடு முழுவதும் உள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,' கொரோனோ வைரஸ் தொற்றுக் காரணத்தினால் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடந்து முடிந்த நீட் தேர்வுவை எழுத முடியாமல் போனது. அதனால் இவ்வாறு தேர்வு எழுதத் தவறி மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த தேதி ஒதுக்கிடுமாறு தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு வரும் 14ம் தேதி தேர்வு நடத்த வேண்டுமென தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews