சென்னையில் சிண்டிகேட் கூட்டம் வீணாகும் பல்கலை நிதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 10, 2020

Comments:0

சென்னையில் சிண்டிகேட் கூட்டம் வீணாகும் பல்கலை நிதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர்கல்வி செயலர் அபூர்வா வசதிக்காக, சிண்டிகேட் கூட்டங்கள் மாதந்தோறும் சென்னையில் நடப்பதால் பல்கலைகளின் நிதி வீணாகிறது. தமிழகத்தில் உள்ள, 21 பல்கலைகளில், ஆறு மட்டும் தொலைதுார மாவட்டங்களில் உள்ளன. பல்கலையின் அனைத்து முடிவுகளுக்கும், உச்ச அமைப்பான சிண்டிகேட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.ஒரு பல்கலையில் துணைவேந்தர், பதிவாளர், நிரந்தர உறுப்பினர் தவிர குறைந்தது, 15 உறுப்பினர்கள் இருப்பர். சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு இவர்கள் செல்ல விமானம், தங்கும் அறை, உணவு, போக்குவரத்து என லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது. இவை அந்தந்த பல்கலைகளின் நிதியில்இருந்து செலவிடப்படுகின்றன. மீறப்படும் மரபு உயர்கல்விச் செயலராகசுனில்பாலிவால் இருந்த வரை, பல்கலையிலேயே இக்கூட்டத்தை நடத்தினார். அவருக்கு பின் வந்தவர்கள், மரபை மீறி சென்னையில் நடத்துகின்றனர். தற்போது, உயர்கல்வி செயலராக அபூர்வா உள்ளார்.சென்னைக்கு, பல்கலை நிதியில் செல்லும் உறுப்பினர்கள், இரண்டு மணி நேரம் நடக்கும் கூட்டத்திற்கு பின், தங்களின் சொந்த வேலையை பார்க்க கிளம்பி விடுகின்றனர்.நிதிப் பற்றாக்குறையால் சம்பளம் கொடுப்பதற்கே பல்கலைகள் திணறும்போது, மாணவர்களின் கல்விக் கட்டணத்தை வீணாக்கலாமா.'இப்பிரச்னையில், முதல்வர் மற்றும் உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்'என, பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews