போலியாக மாணவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை இயக்குநர் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 10, 2020

Comments:0

போலியாக மாணவர்களை சேர்த்தால் கடும் நடவடிக்கை இயக்குநர் எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் போலியாக மாணவர்களை சேர்த்து நலத்திட்டங்கள் பெறுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவிபெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் முதல் சீருடை, காலனி, நோட்டுப்புத்தகம் என பல்வேறு விலையில்லா நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல், உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதனிடையே, உதவிபெறும் பள்ளிகளில் நடப்பாண்டிற்கான ஆசிரியர் பணி நிர்ணயத்தை செப்டம்பர் 30ம் தேதியை கணக்கிட்டு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் நலத்திட்டங்களுக்காக போலியாக மாணவர் சேர்க்கை விவரங்களை தயாரித்து அனுப்பக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி, ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும். எமிஸ் போன்ற தொழில்நுட்ப ஆவணங்கள் மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் துல்லியமாக சரிபார்க்க வேண்டும். இந்த மாணவர்கள் எண்ணிக்கையில் தான், விலையில்லா நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். இணையதள பதிவுகள் வாயிலாக சரிபார்க்கும்போது, போலியான மாணவர்கள் எண்ணிக்கை கண்டறியப்பட்டு, அந்த போலியாக கணக்கிடப்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்கள் பெற்றதாக தெரியவந்தால் அப்பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். வழக்கமாக பணியாளர் நிர்ணயம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு மேற்கொள்ளப்படும். ஆனால் நடப்பாண்டு கொரோனா தொற்று காரணமாக, கடந்த செப்டம்பர் 30ம் தேதியை கணக்கிட்டு, மாணவர்களின் வருகையின் அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் உள்ள பதிவும், எமிஸ்ல் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கையும் இணையாக இருப்பதை வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் சிஇஓக்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தகுதியுள்ள பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்படும் காலிப்பணியிடத்தினை இயக்குநரின் பொது தொகுப்பிற்கு சரண் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews